அத்தியாயம் 1
வந்து இறங்கியவன் நேரே சென்றது தருண் வீட்டுக்கு தான். அவன் தந்த விலாசத்தை வைத்து ஒரு வாறு அவன் வீட்டை கண்டுபிடித்தவன் உள்ளே நுழைய அங்கு ஏற்கனவே முதல் பிரேதம் எரியூட்டப்பட்டு இருக்க, வீடே சோகத்தில் ஆழ்ந்து இருந்தது. அரசியல் வாரிசின் இறப்பல்லவா? அந்த இடமே அரசியல்வாதிகளால் நிறைந்து இருக்க, அங்கு நின்று பேசிக் கொண்டு இருந்த தருணோ ஆதித்தை கண்டதும் ஓடி வந்து அணைத்துக் கொண்டான். திடீரென தருண் அணைத்ததும் அங்கிருந்த அனைவரினதும் பார்வையும் ஆதித்தில் படிந்தது. உடனே அங்கிருந்த ஒருவர் "இது நம்ம கரிகாலன் தம்பி மகனா ?" என்று கேட்க பக்கத்தில் இருந்தவரோ "நானும் அப்படி தான் நினைக்கிறேன் ,சின்ன வயசில அவனை பார்த்த போலவே இருக்கு" என்று பேசிக் கொண்டனர். ஆதித்தும் தன்னிடம் ஆதரவு தேடி தோள் சாய்ந்த தருணின் முதுகை வருட, தருணின் தந்தை தனராஜோ "உள்ள கூட்டி போப்பா" என்று சொல்ல, கண்களை துடைத்த தருண் "உள்ள வாடா" என்று அழைத்து சென்றான். அவ்வளவு சோகத்தின் மத்தியிலும் தன்னை உபசரிக்கும் அவர்கள் குணம் கண்டு அவன் பிரமித்து போனது என்னவோ உண்மை தான். தருணும் அவனுக்கு அறையை ஏற்பாடு பண்ணி கொடுக்க, ஹாலில் வைக்கப்பட்டு இருந்த தருணின் அண்ணனின் படத்தை வணங்கி விட்டு அறைக்குள் நுழைந்த ஆதித்தும் தாயுடனும் தந்தையுடனும் பேசி விட்டு கொஞ்சம் ஓய்வெடுக்க கண்ணயர்ந்தான்.
அதே சமயம் வெளியே நின்ற தனராஜிடம் வந்த போலீஸ்காரன் "ஐயா , தம்பியோட ஜீப்ல மோதின லாரி ட்ரைவர் இன்னைக்கு லாக்கப்பிலேயே சூசைட் பண்ணி இருக்கான். " என்று சொல்ல அதைக் கேட்டு தன்ராஜின் இதழ்கள் விரக்தியாக புன்னகைக்க "இன்ஸ்பெக்டர் உங்களுக்கும் உண்மை தெரியும்..மகனை பறி கொடுத்துட்டு இருக்கிற எனக்கும் உண்மை தெரியும் ,, ஆனா ஒண்ணுமே பண்ண முடியாம கோழை போல நிற்க வேண்டி இருக்கு.. இந்த அரசியல் எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு நிம்மதியா இருக்கணும் போல இருக்கு.. நல்லதே பண்ண முடியாத பதவி எல்லாம் எதுக்கு?" என்று விரக்தியாக பேச போலீஸ்கரனோ தலை குனிந்து நின்றான் என்றால் தன்ராஜின் அருகே இருந்த அவர் கட்சி உறுப்பினர்கள் "ஐயோ ஐயா அப்படி ஏன் பேசுறீங்க? உங்களுக்காக நாங்க இருக்கோம்" என்று சொல்ல "அட போடா" என்றவர் கனத்த மனதுடன் வீட்டுக்குள் நுழைந்து கொண்டார். ஹாலில் அவர் மனைவி மூத்த மகனின் படம் முன்னே இருந்து அழுது கொண்டு இருக்க அதை பார்த்தவர் மனமோ "என் அரசியலுக்காக என் மகனை பறி கொடுத்துட்டேனே " என்று கூக்குரல் இட்டு அழுதது.
இதே சமயம் தன் முன்னே அமர்ந்து இருந்த மிதுனிடம் "இங்க பாரு, உனக்காக அந்த ட்ரைவரை கூட லாக்கப்பில் வச்சு போட்டு இருக்கேன்.. இனி இந்த சின்ன புள்ள வேல பார்க்காம எலெக்ஷன்ல ஜெயிக்க பாரு, புரியுதா?" என்று கேட்க ஆமோதிப்பாக தலை ஆட்டியவன் கண்ணில் அவர்கள் அலுவலக அறைக்குள் நுழைந்த நதீகா பட்டாள்.
அவளுக்காக தானே அவன் ஆள் வைத்து தருணின் அண்ணா வருணை கொலை செய்து இருக்கிறான். வருண் வேறு யாருமல்ல கல்லூரியில் நதீகாவின் சீனியர்.. இருவருக்கும் இடையே அவ்வளவு பெரிய பிணைப்பு இல்லாத போதிலும் அவன் அரசியலில் நுழைந்த பின்னர் நதீகா மீதும் அவள் நிமிர்வின் மீதும் காதல் கொண்டவன் அவன் காதலையும் கூறி இருந்தான். நதீகா அதனை நிராகரித்து விட்டு சாதாரணமாக இருந்தாலும் இந்த விஷயம் மிதுன் காதுக்கு எட்ட அவன் சும்மா இருப்பானா என்ன? ஏற்கனவே வருணுக்கு ஆதரவு அதிகம் என்ற கடுப்பில் இருப்பவன், இப்போது பதவியோடு சேர்த்து தனது வாழ்க்கைக்கும் ஆப்பு வைத்து விடுவானோ என்று பயந்தே அவனை ஆள் வைத்து மொத்தமாக காலி பண்ணி இருந்தான்.
இன்று அவன் தேவதை அந்த அறைக்குள் நுழைய, அவளை அவன் பார்த்த பார்வையை கண்டு கொண்ட மதுபாலா, " கொஞ்ச நாளைக்கு மூடிட்டு உன்னோட எலெக்ஷன் வேலையை மட்டும் பாரு" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சீறியவள் "வெளிய போ" என்று அழுத்தமாக சொன்னாள் . உடனே அவனும் "சரிம்மா" என்றபடி வெளியேறிய கணம் அவன் கண்கள் அவனை தாண்டி சென்ற அவள் மீது படிந்து மீண்டது..
அவளோ அவனை கண்டு கொள்ளாமல் மதுபாலாவை நோக்கி செல்ல "நம்மள ஒரு தடவை திரும்பி பார்க்கிறாளா பாரு?" என்று முணு முணுத்தவன் வெளியேறி இருந்தான். அதே சமயம் ,மதுபாலாவிடம் வந்த நதீகா "மேடம், இன்னைக்கு நாம நெக்ஸ்ட் இயர் ப்ரொஜெக்ட்ஸ் சம்பந்தமா எல்லா டிபார்ட்மென்ட்டையும் மீட்டிங்குக்கு அழைச்சு இருக்கோம்.. ஈவினிங் மூணு மணிக்கு அந்த மீட்டிங் இருக்கு' என்று சொன்னபடி அவள் முன்னே அமர்ந்து கொண்டாள். மதுபாலாவுக்கு நதீகா மேல் அளவு கடந்த நம்பிக்கை இருந்தது. அவளது அரசியல் கையால் நதீகாவின் தந்தை பாண்டியன் என்றால் அலுவலக கையால் நதீகா தான்.
அனைத்து வேலைகளையும் கட்சிதமாக முடித்து அவளது அரசியலுக்கு பலமாக இருப்பவள் அவள். சின்ன வயசிலேயே அனைத்தையும் கண்காணிக்கும் திறன் உடையவள். மதுபாலாவுக்கும் நதீகாவுக்கும் அலுவலக விடயம் தவிர எந்த தொடர்பும் இல்லை.
அரசியல் சாக்கடையில் அவள் ஈடுபடவும் விரும்பாதவள்.. மதுபாலாவின் சூழ்ச்சி, அரசியலில் அவள் காய் நகர்த்தும் திறன் எல்லாம் நதீகாவுக்கு இலை மறை காயாக தெரிந்தாலும் அதனை சட்டை செய்யாமல் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பவள். அதனாலேயே அவள் மதுபாலாவின் செல்ல பிள்ளை ஆகி போனாள்.
அவள் சொன்னதை கிரகித்த மதுபாலா, "அதுக்கான எல்லா பாயிண்ட்ஸ் ஐயும் நோட் பண்ணி கொடு" என்று சொல்ல அவளும் சம்மதமாக தலை ஆட்டினாள். இதே சமயம் , தூங்கி எழுந்த ஆதித்தும் நேரத்தை தருணுடன் செலவழித்தவன் அவனுக்கு பக்க பலமாக இருந்தான். அப்போது பலர் ஆதித்தை பார்த்து அப்படியே கரிகாலன் போல இருப்பதாக கூற அவனுக்கோ ஒரு வித பூரிப்பு உருவானது. அதே சமயம் அவர்கள் அவனிடம் மரியாதையாக நடந்து கொண்ட விதமே அவனுக்கு தந்தையின் நல்ல குணத்தை எடுத்து காட்ட கரிகாலனை நினைத்து மனம் நிறைந்து கொண்டான். அவனை சுற்றி இருந்தவர்கள் வம்பு வளர்ப்பவர்கள் அல்ல என்பதனாலேயே அவன் மதுபாலாவின் மகன் என்று அறிந்தும் யாரும் அதை பற்றி மரியாதையின் நிமித்தம் பேசவில்லை.
இப்படியான நாளில் தான் ஆதித்தும் தருணும் புல்லட்டில் ஊரை சுற்றிப் பார்க்க பயணம் செய்தார்கள். அப்போது வீதி ஓரத்தில் ஒரு நடக்க முடியாத பெண் பூ கட்டி கொண்டு இருக்க, அவள் அருகே வண்டியை நிறுத்த சொன்ன ஆதித், அங்கிருந்து இறங்கி காசை கொடுத்தவன் சில முழங்கள் மல்லிகை பூ வாங்கிக் கொண்டான். உடனே அந்த பெண்ணோ "நன்றி சார், அக்காவுக்கு கொடுங்க" என்று சொல்ல அதைக் கேட்டு முத்துப் பற்கள் தெரிய சிரித்தவன் "சரிம்மா" என்றபடி தருணை பார்க்க அவனோ "எந்த அக்காவுக்கு டா கொடுக்க போற?" என்று நக்கலாக கேட்டான். ஆதித்தும் "போற வழியில கோவிலுக்கு பொய்ட்டு போகலாம்," என்று சொன்னபடி வண்டியில் கால் வைக்க போன சமயம் அங்கு அவனை மோதுவது போல வந்த கார் சடன் பிரேக் போட்டு பூ விற்கும் பெண் அருகே நின்றது.
காரைக் கண்டதுமே அந்த பெண், கஷ்டப்பட்டு கைப்பிடியை பிடித்துக் கொண்டு எழுந்தவள் காரை நோக்கி நடந்து சென்று அவள் கட்டி வைத்து இருந்த மல்லிகை பூ மாலையை திறந்து இருந்த கார் கண்ணாடியூடு கொடுத்தாள். அந்த சமயம் அவள் இடையில் இருந்த சாவி விழுந்து விட, அதை எடுக்க கஷ்டப்பட்டு குனிந்தாள் அந்த பூ கட்டும் பெண். அதை பார்த்து பரிதாபப்பட்ட ஆதித் "கொஞ்சம் இருடா" என்று சொன்னபடி அந்த பூ கட்டும் பெண்ணை நோக்கி சென்ற கணம், நேரத்தை பார்த்த நதீகாவுக்கோ மூச்சு விட கூட அவகாசம் போதவில்லை. மீட்டிங் தொடங்க முதல் இந்த மாலையை கொடுத்தாக வேண்டிய கட்டாயம் வேறு. பெருமூச்சுடன் "இந்த பொண்ணு குனிஞ்சு எடுக்கும் போது இதயும் எடுக்கட்டும்" என்று நினைத்தபடி காசை அந்த பெண் அருகே போட்டவள் "எடுத்துக்கோ " என்று சொல்லி கார் கண்ணடியை மூடி விட்டு காரை ஸ்டார்ட் பண்ணிய கணம் அவள் கார் கண்ணாடி தட்டப்பட்டது.
அவளோ "இந்த நேரத்தில யாரு"என்று கண்ணாடியூடு பார்த்தவள் கண்ணாடியை இறக்க சற்று குனிந்த ஆதித் "இறங்குடி " என்றான். அவளோ "வாட்? டியா ?மைண்ட் யோர் வேர்ட்ஸ் மேன் " என்று சொல்ல கையினை உள்ளே இட்டு அவளது ரிமோர்ட் சாவியை தூக்கி எடுத்தவன் "வெளியே இறங்கு" என்று சொல்லி விட்டு அந்த பூ கட்டும் பெண்ணை பார்த்து "நீயா குனிஞ்சு அந்த காசை எடுத்தா கொன்னுடுவேன்" என்று ஒற்றை விரலை நோக்கி மிரட்ட நதீகாவுக்கோ கோபம் எல்லை கடந்து போனது.
காரை திறந்து கொண்டு கோபமாக கீழே இறங்கியவள் " நான் யார்னு தெரியாம விளையாடுற " என்று சீற அவனோ " எந்த கொம்பனா இருந்தாலும் எனக்கு கவலை இல்ல..காசை எடுடி " என்று பதிலுக்கு சீறினான் .
உடனே அவள் " நான் மினிஸ்டராட செகிரீடரி ..எம் எல் ஏ உடைய பொண்ணு தெரியுமா? " என்று சீற அவனோ " அதுக்கு உன் கை காச நீட்டி கொடுக்காதா என்ன?? இப்போ நீ குனிஞ்சு இந்த காச எடுக்கணும் " என்று சொல்ல அவளோ " முடியாது " என்றவள் அவன் கையில் இருந்த கீயை பறிக்க போக அதனை அவன் உயர்த்தி பிடிக்க அவளுக்கு தான் அந்த உயரத்துக்கு எம்ப முடியாமல் போனது.
பெருமூச்சுடன் போனை எடுத்து தனது வேலையாளுக்கு அழைத்தவள் "என்னோட டூப்ளிகேட் கீயை எடுத்துட்டு வா" என்று அவள் நின்ற இடத்தை கூறியபடி "கீயை நீயே வச்சுக்கோ " என்று ஆதித்திடம் சொல்லிக் கொண்டே கார் கதவை திறந்த கணம் அவள் காரின் பின் கண்ணாடி நொறுங்கி இருந்தது.
பக்கத்தில் இருந்த சைக்கிள் கடையில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ஆதித் அவளது கார் கண்ணாடியை நொறுக்கி இருக்க அவளோ " லூசா நீ?? பத்து ரூபாவுக்காக என் பத்து மில்லியன் பெறுமதியான காரை நொறுக்குவியா? " என்று கேட்டவள் மேலும் " இப்போ நீ இந்த காசை தரலன்னா உன்னை மதுபாலா மேடம். கிட்ட சொல்லி ஜெயிலுக்குள்ள தள்ளுவேன் பார்த்துக்கோ " என்று சீற அவனோ " வர சொல்லுடி உன் மதுபாலாவை.. நானா அவங்களான்னு பார்த்துக்கலாம் ..." என்று சபதிலுக்கு சீறினான்.
அவன் அருகே வந்த அவன் நண்பன் தருண் " வேணாம்டா அவங்க கொஞ்சம் மோசமானவங்க... அவங்க மகனை எதிர்த்து நிற்க போய் தான் வருண் இறந்தான்..இப்போ அவனுக்கு எதிரா நிற்க பயப்படுறாங்க,, நீ வேற வெளி ஊர் , அவங்க கூட வச்சுக்காதடா வா போய்டலாம் " என்று சொல்ல அவனை அழுத்தமாக பார்த்த ஆதித் " யாரும் இல்லன்னா சொல்லு நானே நிற்கிறேன்.. " என்று சொல்ல அது நதீகா காதில் தெளிவாக விழுந்தது.
உடனே நதீகா "ஓஹ் வெளியூர் காரன் நீ எலெக்ஷன்ல நின்னு ஜெயிக்க போறியா? குட் ஜோக்" என்று சொல்லி சிரித்தவள் "உன் பிரெண்டுக்கு கொஞ்சம் ஆர்வ கோளாறு போல, அடக்கி வை" என்றபடி காரில் ஏற போக,அவனோ அவளை இழுத்து விட்டு கார் கதவை அடித்து சாத்தியவன் கையில் இருந்த கார் கீயை கொண்டு காரை லாக் பண்ணி இருந்தான்.
அவளோ தன் மீது கொஞ்சமும் பயம் இன்றி கை வைத்து இழுத்தவனை அதிர்ந்து பார்க்க ஆதித்தும் கொஞ்சமும் சளைக்காமல் "நான் எலெக்ஷன்ல நிற்கிறது நிற்காதது வேற விஷயம், குனிஞ்சு இந்த காசை எடுடி" என்று சொன்னான். அவளோ "முடிஞ்சா எடுக்க வச்சு பாரு" என்று சொல்லி விட்டு மார்புக்கு கையை குறுக்காக கட்டியபடி நிற்க தருணோ 'டேய் வம்பு பண்ணாதடா, வாடா போய்டலாம்" என்று சொல்ல அவனோ "இவ எல்லாம் ஒரு ஆளுன்னு பயந்துட்டு நிற்கிற ..இப்போ பாரு நான் பேசுற பேச்சுல அவ ஆடி போவா" என்றவன் சத்தமாக பக்கத்தில் நின்றவர்களிடம் "இவங்க ஆளுங்கட்சி மினிஸ்டர் ஓட பி ஏ தானே, இந்த பொண்ணுக்கு காச பிச்சை போடுற போல எறிஞ்சு இருக்காங்க,, இப்படிப்பட்ட ஆட்களுக்கு நீங்க வாக்கு அளிக்கணுமா என்ன? நம்ம போடுற பிச்சை வாக்குல பதவிக்கு வந்திட்டு இப்போ உழைப்பாளிகளை பிச்சை காரன் போல நடத்துறாங்க,, அந்த மதுபாலாவோட பையன் தானே இந்த மேயர் எலெக்ஷன்ல நிற்கிறான். அவன் ஆட்சிக்கு வந்தா எப்படி இருக்கும்னு யோசிங்க... அவங்க பி ஏ க்கே இந்த திமிர்னா அந்த பையன் எப்படி இருப்பான்?" என்று அந்த இடத்தில் அரசியல் பேசியவன் கண்கள் ஒரு கணம் நதீகாவில் பதிந்து மீள அவளோ விதிர் விதித்து போனாள்.
"நம்மள வச்சே அரசியல் பண்ணுறானே." என்று பயந்தவள் "அப்படிலாம் ஒன்னும் இல்ல, எனக்கு மக்கள் மேல மதிப்பு இருக்கு" என்று சொல்ல அவனோ "அப்போ அந்த காசை குனிஞ்சு எடுக்க வேண்டியது தானே" என்று சொன்ன அடுத்த கணமே அவள் குனிந்து அந்த காசை எடுத்து பூ கட்டும் பெண்ணின் கையில் வைத்தாள். உடனே அவன் மெல்லிய சிரிப்புடன் அவள் அருகே வந்து கார் கீயை நீட்ட அவளோ அவனை எரித்து விடுவது போல பார்த்துக் கொண்டே அதை பறித்து எடுத்தவள் காரில் ஏற அவனோ தனது பர்சில் இருந்த விசிட்டிங் கார்டை எடுத்து கார் கண்ணாடியின் ஊடு அவளிடம் கொடுத்து "உன் கண்ணாடிக்கு காசை நான் தரேன் நாளைக்கே கால் பண்ணு " என்றவன் "எடுடா வண்டியை" என்றபடி புல்லட்டில் ஏறிக் கொள்ள நதீகாவோ மனம் எல்லாம் ரணமாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.
வண்டியில் செல்லும் போதே தருண் மதுபாலாவின் அரசியல் காய் நகர்வுகளை பற்றி சொல்ல ஆதித்தோ "ரொம்ப பயங்கரமான பொம்பிளையா இருக்கும் போலவே டா. ஆனா எதுக்கு நீ பயப்படணும்?.. நீ உன் அண்ணாக்கு பதிலா நில்லு, உன்னை நான் ஜெயிக்க வைக்கிறேன்.. நாளைக்கே அந்த மதுபாலா கோஷ்டிக்கு முடிவு கட்ட ஆரம்பிக்கலாம்.. நம்ம முதல் பலி ஆடு இந்த பொண்ணு..ஆமா இவ பேர் என்ன?" என்று கேட்க தருணோ "இவ பேர் நதீகா , " என்று சொல்ல "ஓஹ் , அப்போ நம்ம முதல் செக் மேட் வைக்க வேண்டியது இந்த பொண்ணுக்கு தான்" என்று சொல்ல தருணோ "அப்பாக்கு தெரிஞ்சா என்ன கொன்னுடுவார்டா" என்று சொல்ல ஆதித்தோ "பயந்து பயந்து அரசியல் பண்ண முடியாது. நீ மேயர் ஆகிறது என்னோட பொறுப்பு" என்றவன் காய்களை கச்சிதமாக நகர்த்த யோசித்தான். அதே சமயம் இரு நாட்கள் கழித்து கார் கண்ணாடி சீர் செய்து வந்த பில்லை பார்த்த நதீகா "அது தான் அவனே காசு தரேன்னு சொன்னானே. எதுக்கு நாம சும்மா செலவழிக்கணும் " என்று நினைத்தவாறே அவன் விசிட்டிங் கார்டை தேடி எடுத்து அவனுக்கு அழைத்தாள்.
மறுமுனையில் அவன் "ஹெலோ" என்றதுமே அவள் " என் காசை எப்போ தருவ? " என்று கேட்க ஆதித்தோ " நான் சொல்ற இடத்துக்கு டென் மினிட்ஸ் ல வா. " என்றான். அவளோ " என் காரை உடைச்ச நீ தான் தேடி வந்து காசு தரணும் " என்று எகிற அவனும் " காசு வேணும்னா வாடி " என்றபடி போனை வைத்து விட்டான். சிறிது நேரத்தில் அவன் சொன்ன இடத்துக்கு செல்ல அங்கு ஒரு சின்ன பையன் கையில் பையுடன் காத்துக் கொண்டு இருந்தான். அவளும் காரில் இருந்து இறங்கி சுற்றும் முற்றும் பார்க்க அவளை நோக்கி வந்த அந்த பையன் " உங்க கிட்ட ஆதித் அண்ணன் கொடுக்க சொன்னார் " என்று சொல்ல பையை வாங்கி காசை எடுத்து எண்ணி பார்த்தவள் " ஐயா நேர்ல வரமாட்டாரா?? சரி நீ போ " என்றபடி காரில் ஏற அந்த பையனோ கை கூப்பி முகத்தை பாவமாக வைத்தபடி வணக்கம் தெரிவித்தவன் அங்கிருந்து அகல அவளும் தோள்களை உலுக்கி விட்டு காரில் ஏறிக் கொண்டாள் ..
அடுத்த நாள் டி வி யைப் போட்ட நதீகா அதிர்ந்து நின்றாள் .. ஆம் கண்ணீருடன் பேட்டி கொடுத்துக் கொண்டு நின்ற அந்த பையன் " என் அம்மாவோட தாலியை வித்து அரசாங்க வேலைக்காக காசு கொடுத்தேன் .. அதுக்கு ஆதாரம் கூட இருக்கு... ஆனா இப்போ வேலை தர மாட்டேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க.. " என்று சொல்ல அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.. மதுபாலாவுக்கு எதிரான அந்த தொலைக்காட்சியும் நதீகா காசு வாங்கிய காணொளியை போட்டு காட்ட அவளுக்கு இது அனைத்தும் ஆதித்தின் சதி என்று தெளிவாக தெரிய அவள் போன் அலறியது..
மறுமுனையில் மதுபாலா " நதி என்ன பண்ணி வச்சு இருக்க?? " என்று திட்ட ஆரம்பிக்க அவளோ " மேடம் இது நான் பண்ணல... திட்டமிட்ட சதி " என்று சொன்னவள் " கொஞ்சம் டைம் தாங்க மேடம் " என்றபடி ஆதித்துக்கு போனை எடுத்தால் அவன் எடுக்கவே இல்லை.
நேரே காரில் ஏறியவள் தருண் வீட்டுக்கு செல்ல முற்பட அங்கு சாலை ஓரத்தில் ஆதித் இளநீர் குடித்துக் கொண்டு இருந்தது கண்ணில் பட்டது.. அடுத்த கணமே இறங்கி அவனை நோக்கி சென்றவள் கையில் இருந்த இளநீரை தட்டி விட அவனோ " என்னாச்சு?? " என்று யோசனையாக கேட்டான். அவளும் " இன்னும் என்ன ஆகணும்.? பிளான் பண்ணி என்ன மாட்டி விட பார்க்கிறியா? எதுக்குடா அப்படி பண்ணுன? யூ இடியட் ,, " என்று திட்ட அவனும் " நான் என்ன பண்ணினேன்?? " என்று சாதாரணமாக கேட்டான். " இங்க பாரு..இந்த நடிக்கிற வேலை வச்சுக்காத ... எனக்கு வர்ற கோபத்துக்கு " என்று ஆரம்பிக்க " கார் கண்ணாடியை உடைக்கனும் போல இருக்கா? இந்த கார்ல கை வைக்க அவ்ளோ தைரியம் இருக்கா " என்று கேட்க அவளோ பக்கத்தில் இருந்த கட்டையை தூக்கியவள் ஆத்திரத்தில் சற்றும் யோசிக்காமல் " யாருக்கு தைரியம் இல்ல? " என்றபடி அந்த கார் கண்ணாடியை ஓங்கி அடித்தாள் ...
உடனே அருகே இருந்த கடையில் இருந்து ஓடி வந்த ஒருவன் " ஐயோ என் கார் " என்று சொல்ல அவள் செயலை கழுத்தை வருடியவாறு பார்த்துக் கொண்டு இருந்த ஆதித் " வண்டிய எடுடா போகலாம் " என்றபடி அவர்கள் வந்த புல்லட்டில் ஏற அதிர்ச்சியும் கோபமுமாக அவனை முறைத்துப் பார்த்தாள் நதீகா.. அவனோ பின்னால் ஏறி இருந்து ஹெல்மட்டை போட்டு முகத்தை மறைத்தவன் வண்டி ஸ்டார்ட் ஆனதும் நடுவிரலை அவளை நோக்கி காட்டி விட்டு செல்ல அவளுக்கோ கோபம் எல்லை கடந்து போனது. இடையில் காரின் உரிமையாளன், " என் கார் மேடம் " என்று ஆர்மபிக்க " கொஞ்சம் இரு " என்றவள் தனது பையில் இருந்து காசை எடுத்து அவன் கையில் வைத்துவிட்டு கொதிக்கும் மனதோடு புறப்பட்டாள்.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக அடுத்த நாள் " மினிஸ்டர் மதுபாலாவின் செகிரீடரியும் எம் எல் ஏ பாண்டியனின் மகளுமான நதீகவின் வெறி செயல்.. மனநிலை பாதிக்கப்பட்டு இருக்காரா? " என்று தலைப்பை இட்டு ஒரு செய்தி அவள் கார் கண்ணாடியை உடைக்கும் படத்துடன் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டு இருந்தது..ஏற்கனவே நதீகாவிடம் இருந்து ஒழுங்கான பதில் கிடைக்காத கோபத்தில் இருந்த மதுபாலா, இன்னும் கொதித்து போனாள். நதீகாவுக்கு அழைத்தவள் " வாட்ஸ் ராங் வித் யூ?" என்று சீற, அவளும் இனி மறைத்து பயன் இல்லை என்று நினைத்தவள் ஆதித் செய்த அனைத்தையும் கூறி விட அதைக் கேட்ட மதுபாலாவோ "ஹீ இஸ் டேஞ்சரெஸ்,, இனி அவன் கிட்ட கவனமா இரு, வாய கொடுக்காதே.. நான் பார்த்துகிறேன்" என்று போனை வைத்தவள் தனது அடியாளை அழைத்து " தன்ராஜ் வீட்ட ஒருத்தன் வந்து இருக்கான். அவன் மகனோட பிரென்ட்.,ஏதோ சாதிக்கோ ஆதிக் ஆம் .. பேர் நினைவு வரல, " என்று சொன்னவளுக்கு நதீகா சொன்ன பெயரும் தெளிவாக விளங்கவில்லை. பெருமூச்செடுத்தவள் "அவன் மேல ஒரு கண் வச்சுக்கோ.. " என்று சொல்ல அந்த அடியாளும் சம்மதமாக தலை ஆட்டினான்.
அதே சமயம் கால் மேல் கால் போட்டு இருந்த ஆதித் நாடியை நீவியவாறு பத்திரிகையில் வெளி ஆகி இருந்த நதீகாவின் படத்தை பார்த்து சிரித்துக் கொண்டு இருக்க அவன் அருகே இருந்த தருணோ "டேய் என்னடா இப்படி இருக்க? அரசியலிலே இவ்ளோ நாள் இருக்கிற என் அப்பாக்கு கூட இந்த அளவுக்கு அரசியல் அறிவு இல்ல, நீ வேற லெவல் மச்சி" என்று சொல்ல அவனை பார்த்து ஒற்றை கண்ணை அடித்தவன் "உன் அப்பா கிட்ட போய் சொல்லு தேர்தல் ல நிற்க போறேன்னு..உனக்கு நான் இருக்கேன். இந்த எலெக்ஷன் முடிஞ்சு உன்னை மேயராக்கும் மட்டும் நான் இந்த ஊரை விட்டு போக மாட்டேன்.. " என்று சொல்ல அவனும் தந்தையை தேடி புறப்பட்டான்.
அதே சமயம் "உன்னை மேயர் ஆக வைக்கிறது என்னோட பொறுப்பு.. டென்சன் ஆகாத மிதுன்" என்று மகனை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தாள் மதுபாலா.
வந்து இறங்கியவன் நேரே சென்றது தருண் வீட்டுக்கு தான். அவன் தந்த விலாசத்தை வைத்து ஒரு வாறு அவன் வீட்டை கண்டுபிடித்தவன் உள்ளே நுழைய அங்கு ஏற்கனவே முதல் பிரேதம் எரியூட்டப்பட்டு இருக்க, வீடே சோகத்தில் ஆழ்ந்து இருந்தது. அரசியல் வாரிசின் இறப்பல்லவா? அந்த இடமே அரசியல்வாதிகளால் நிறைந்து இருக்க, அங்கு நின்று பேசிக் கொண்டு இருந்த தருணோ ஆதித்தை கண்டதும் ஓடி வந்து அணைத்துக் கொண்டான். திடீரென தருண் அணைத்ததும் அங்கிருந்த அனைவரினதும் பார்வையும் ஆதித்தில் படிந்தது. உடனே அங்கிருந்த ஒருவர் "இது நம்ம கரிகாலன் தம்பி மகனா ?" என்று கேட்க பக்கத்தில் இருந்தவரோ "நானும் அப்படி தான் நினைக்கிறேன் ,சின்ன வயசில அவனை பார்த்த போலவே இருக்கு" என்று பேசிக் கொண்டனர். ஆதித்தும் தன்னிடம் ஆதரவு தேடி தோள் சாய்ந்த தருணின் முதுகை வருட, தருணின் தந்தை தனராஜோ "உள்ள கூட்டி போப்பா" என்று சொல்ல, கண்களை துடைத்த தருண் "உள்ள வாடா" என்று அழைத்து சென்றான். அவ்வளவு சோகத்தின் மத்தியிலும் தன்னை உபசரிக்கும் அவர்கள் குணம் கண்டு அவன் பிரமித்து போனது என்னவோ உண்மை தான். தருணும் அவனுக்கு அறையை ஏற்பாடு பண்ணி கொடுக்க, ஹாலில் வைக்கப்பட்டு இருந்த தருணின் அண்ணனின் படத்தை வணங்கி விட்டு அறைக்குள் நுழைந்த ஆதித்தும் தாயுடனும் தந்தையுடனும் பேசி விட்டு கொஞ்சம் ஓய்வெடுக்க கண்ணயர்ந்தான்.
அதே சமயம் வெளியே நின்ற தனராஜிடம் வந்த போலீஸ்காரன் "ஐயா , தம்பியோட ஜீப்ல மோதின லாரி ட்ரைவர் இன்னைக்கு லாக்கப்பிலேயே சூசைட் பண்ணி இருக்கான். " என்று சொல்ல அதைக் கேட்டு தன்ராஜின் இதழ்கள் விரக்தியாக புன்னகைக்க "இன்ஸ்பெக்டர் உங்களுக்கும் உண்மை தெரியும்..மகனை பறி கொடுத்துட்டு இருக்கிற எனக்கும் உண்மை தெரியும் ,, ஆனா ஒண்ணுமே பண்ண முடியாம கோழை போல நிற்க வேண்டி இருக்கு.. இந்த அரசியல் எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு நிம்மதியா இருக்கணும் போல இருக்கு.. நல்லதே பண்ண முடியாத பதவி எல்லாம் எதுக்கு?" என்று விரக்தியாக பேச போலீஸ்கரனோ தலை குனிந்து நின்றான் என்றால் தன்ராஜின் அருகே இருந்த அவர் கட்சி உறுப்பினர்கள் "ஐயோ ஐயா அப்படி ஏன் பேசுறீங்க? உங்களுக்காக நாங்க இருக்கோம்" என்று சொல்ல "அட போடா" என்றவர் கனத்த மனதுடன் வீட்டுக்குள் நுழைந்து கொண்டார். ஹாலில் அவர் மனைவி மூத்த மகனின் படம் முன்னே இருந்து அழுது கொண்டு இருக்க அதை பார்த்தவர் மனமோ "என் அரசியலுக்காக என் மகனை பறி கொடுத்துட்டேனே " என்று கூக்குரல் இட்டு அழுதது.
இதே சமயம் தன் முன்னே அமர்ந்து இருந்த மிதுனிடம் "இங்க பாரு, உனக்காக அந்த ட்ரைவரை கூட லாக்கப்பில் வச்சு போட்டு இருக்கேன்.. இனி இந்த சின்ன புள்ள வேல பார்க்காம எலெக்ஷன்ல ஜெயிக்க பாரு, புரியுதா?" என்று கேட்க ஆமோதிப்பாக தலை ஆட்டியவன் கண்ணில் அவர்கள் அலுவலக அறைக்குள் நுழைந்த நதீகா பட்டாள்.
அவளுக்காக தானே அவன் ஆள் வைத்து தருணின் அண்ணா வருணை கொலை செய்து இருக்கிறான். வருண் வேறு யாருமல்ல கல்லூரியில் நதீகாவின் சீனியர்.. இருவருக்கும் இடையே அவ்வளவு பெரிய பிணைப்பு இல்லாத போதிலும் அவன் அரசியலில் நுழைந்த பின்னர் நதீகா மீதும் அவள் நிமிர்வின் மீதும் காதல் கொண்டவன் அவன் காதலையும் கூறி இருந்தான். நதீகா அதனை நிராகரித்து விட்டு சாதாரணமாக இருந்தாலும் இந்த விஷயம் மிதுன் காதுக்கு எட்ட அவன் சும்மா இருப்பானா என்ன? ஏற்கனவே வருணுக்கு ஆதரவு அதிகம் என்ற கடுப்பில் இருப்பவன், இப்போது பதவியோடு சேர்த்து தனது வாழ்க்கைக்கும் ஆப்பு வைத்து விடுவானோ என்று பயந்தே அவனை ஆள் வைத்து மொத்தமாக காலி பண்ணி இருந்தான்.
இன்று அவன் தேவதை அந்த அறைக்குள் நுழைய, அவளை அவன் பார்த்த பார்வையை கண்டு கொண்ட மதுபாலா, " கொஞ்ச நாளைக்கு மூடிட்டு உன்னோட எலெக்ஷன் வேலையை மட்டும் பாரு" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சீறியவள் "வெளிய போ" என்று அழுத்தமாக சொன்னாள் . உடனே அவனும் "சரிம்மா" என்றபடி வெளியேறிய கணம் அவன் கண்கள் அவனை தாண்டி சென்ற அவள் மீது படிந்து மீண்டது..
அவளோ அவனை கண்டு கொள்ளாமல் மதுபாலாவை நோக்கி செல்ல "நம்மள ஒரு தடவை திரும்பி பார்க்கிறாளா பாரு?" என்று முணு முணுத்தவன் வெளியேறி இருந்தான். அதே சமயம் ,மதுபாலாவிடம் வந்த நதீகா "மேடம், இன்னைக்கு நாம நெக்ஸ்ட் இயர் ப்ரொஜெக்ட்ஸ் சம்பந்தமா எல்லா டிபார்ட்மென்ட்டையும் மீட்டிங்குக்கு அழைச்சு இருக்கோம்.. ஈவினிங் மூணு மணிக்கு அந்த மீட்டிங் இருக்கு' என்று சொன்னபடி அவள் முன்னே அமர்ந்து கொண்டாள். மதுபாலாவுக்கு நதீகா மேல் அளவு கடந்த நம்பிக்கை இருந்தது. அவளது அரசியல் கையால் நதீகாவின் தந்தை பாண்டியன் என்றால் அலுவலக கையால் நதீகா தான்.
அனைத்து வேலைகளையும் கட்சிதமாக முடித்து அவளது அரசியலுக்கு பலமாக இருப்பவள் அவள். சின்ன வயசிலேயே அனைத்தையும் கண்காணிக்கும் திறன் உடையவள். மதுபாலாவுக்கும் நதீகாவுக்கும் அலுவலக விடயம் தவிர எந்த தொடர்பும் இல்லை.
அரசியல் சாக்கடையில் அவள் ஈடுபடவும் விரும்பாதவள்.. மதுபாலாவின் சூழ்ச்சி, அரசியலில் அவள் காய் நகர்த்தும் திறன் எல்லாம் நதீகாவுக்கு இலை மறை காயாக தெரிந்தாலும் அதனை சட்டை செய்யாமல் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பவள். அதனாலேயே அவள் மதுபாலாவின் செல்ல பிள்ளை ஆகி போனாள்.
அவள் சொன்னதை கிரகித்த மதுபாலா, "அதுக்கான எல்லா பாயிண்ட்ஸ் ஐயும் நோட் பண்ணி கொடு" என்று சொல்ல அவளும் சம்மதமாக தலை ஆட்டினாள். இதே சமயம் , தூங்கி எழுந்த ஆதித்தும் நேரத்தை தருணுடன் செலவழித்தவன் அவனுக்கு பக்க பலமாக இருந்தான். அப்போது பலர் ஆதித்தை பார்த்து அப்படியே கரிகாலன் போல இருப்பதாக கூற அவனுக்கோ ஒரு வித பூரிப்பு உருவானது. அதே சமயம் அவர்கள் அவனிடம் மரியாதையாக நடந்து கொண்ட விதமே அவனுக்கு தந்தையின் நல்ல குணத்தை எடுத்து காட்ட கரிகாலனை நினைத்து மனம் நிறைந்து கொண்டான். அவனை சுற்றி இருந்தவர்கள் வம்பு வளர்ப்பவர்கள் அல்ல என்பதனாலேயே அவன் மதுபாலாவின் மகன் என்று அறிந்தும் யாரும் அதை பற்றி மரியாதையின் நிமித்தம் பேசவில்லை.
இப்படியான நாளில் தான் ஆதித்தும் தருணும் புல்லட்டில் ஊரை சுற்றிப் பார்க்க பயணம் செய்தார்கள். அப்போது வீதி ஓரத்தில் ஒரு நடக்க முடியாத பெண் பூ கட்டி கொண்டு இருக்க, அவள் அருகே வண்டியை நிறுத்த சொன்ன ஆதித், அங்கிருந்து இறங்கி காசை கொடுத்தவன் சில முழங்கள் மல்லிகை பூ வாங்கிக் கொண்டான். உடனே அந்த பெண்ணோ "நன்றி சார், அக்காவுக்கு கொடுங்க" என்று சொல்ல அதைக் கேட்டு முத்துப் பற்கள் தெரிய சிரித்தவன் "சரிம்மா" என்றபடி தருணை பார்க்க அவனோ "எந்த அக்காவுக்கு டா கொடுக்க போற?" என்று நக்கலாக கேட்டான். ஆதித்தும் "போற வழியில கோவிலுக்கு பொய்ட்டு போகலாம்," என்று சொன்னபடி வண்டியில் கால் வைக்க போன சமயம் அங்கு அவனை மோதுவது போல வந்த கார் சடன் பிரேக் போட்டு பூ விற்கும் பெண் அருகே நின்றது.
காரைக் கண்டதுமே அந்த பெண், கஷ்டப்பட்டு கைப்பிடியை பிடித்துக் கொண்டு எழுந்தவள் காரை நோக்கி நடந்து சென்று அவள் கட்டி வைத்து இருந்த மல்லிகை பூ மாலையை திறந்து இருந்த கார் கண்ணாடியூடு கொடுத்தாள். அந்த சமயம் அவள் இடையில் இருந்த சாவி விழுந்து விட, அதை எடுக்க கஷ்டப்பட்டு குனிந்தாள் அந்த பூ கட்டும் பெண். அதை பார்த்து பரிதாபப்பட்ட ஆதித் "கொஞ்சம் இருடா" என்று சொன்னபடி அந்த பூ கட்டும் பெண்ணை நோக்கி சென்ற கணம், நேரத்தை பார்த்த நதீகாவுக்கோ மூச்சு விட கூட அவகாசம் போதவில்லை. மீட்டிங் தொடங்க முதல் இந்த மாலையை கொடுத்தாக வேண்டிய கட்டாயம் வேறு. பெருமூச்சுடன் "இந்த பொண்ணு குனிஞ்சு எடுக்கும் போது இதயும் எடுக்கட்டும்" என்று நினைத்தபடி காசை அந்த பெண் அருகே போட்டவள் "எடுத்துக்கோ " என்று சொல்லி கார் கண்ணடியை மூடி விட்டு காரை ஸ்டார்ட் பண்ணிய கணம் அவள் கார் கண்ணாடி தட்டப்பட்டது.
அவளோ "இந்த நேரத்தில யாரு"என்று கண்ணாடியூடு பார்த்தவள் கண்ணாடியை இறக்க சற்று குனிந்த ஆதித் "இறங்குடி " என்றான். அவளோ "வாட்? டியா ?மைண்ட் யோர் வேர்ட்ஸ் மேன் " என்று சொல்ல கையினை உள்ளே இட்டு அவளது ரிமோர்ட் சாவியை தூக்கி எடுத்தவன் "வெளியே இறங்கு" என்று சொல்லி விட்டு அந்த பூ கட்டும் பெண்ணை பார்த்து "நீயா குனிஞ்சு அந்த காசை எடுத்தா கொன்னுடுவேன்" என்று ஒற்றை விரலை நோக்கி மிரட்ட நதீகாவுக்கோ கோபம் எல்லை கடந்து போனது.
காரை திறந்து கொண்டு கோபமாக கீழே இறங்கியவள் " நான் யார்னு தெரியாம விளையாடுற " என்று சீற அவனோ " எந்த கொம்பனா இருந்தாலும் எனக்கு கவலை இல்ல..காசை எடுடி " என்று பதிலுக்கு சீறினான் .
உடனே அவள் " நான் மினிஸ்டராட செகிரீடரி ..எம் எல் ஏ உடைய பொண்ணு தெரியுமா? " என்று சீற அவனோ " அதுக்கு உன் கை காச நீட்டி கொடுக்காதா என்ன?? இப்போ நீ குனிஞ்சு இந்த காச எடுக்கணும் " என்று சொல்ல அவளோ " முடியாது " என்றவள் அவன் கையில் இருந்த கீயை பறிக்க போக அதனை அவன் உயர்த்தி பிடிக்க அவளுக்கு தான் அந்த உயரத்துக்கு எம்ப முடியாமல் போனது.
பெருமூச்சுடன் போனை எடுத்து தனது வேலையாளுக்கு அழைத்தவள் "என்னோட டூப்ளிகேட் கீயை எடுத்துட்டு வா" என்று அவள் நின்ற இடத்தை கூறியபடி "கீயை நீயே வச்சுக்கோ " என்று ஆதித்திடம் சொல்லிக் கொண்டே கார் கதவை திறந்த கணம் அவள் காரின் பின் கண்ணாடி நொறுங்கி இருந்தது.
பக்கத்தில் இருந்த சைக்கிள் கடையில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ஆதித் அவளது கார் கண்ணாடியை நொறுக்கி இருக்க அவளோ " லூசா நீ?? பத்து ரூபாவுக்காக என் பத்து மில்லியன் பெறுமதியான காரை நொறுக்குவியா? " என்று கேட்டவள் மேலும் " இப்போ நீ இந்த காசை தரலன்னா உன்னை மதுபாலா மேடம். கிட்ட சொல்லி ஜெயிலுக்குள்ள தள்ளுவேன் பார்த்துக்கோ " என்று சீற அவனோ " வர சொல்லுடி உன் மதுபாலாவை.. நானா அவங்களான்னு பார்த்துக்கலாம் ..." என்று சபதிலுக்கு சீறினான்.
அவன் அருகே வந்த அவன் நண்பன் தருண் " வேணாம்டா அவங்க கொஞ்சம் மோசமானவங்க... அவங்க மகனை எதிர்த்து நிற்க போய் தான் வருண் இறந்தான்..இப்போ அவனுக்கு எதிரா நிற்க பயப்படுறாங்க,, நீ வேற வெளி ஊர் , அவங்க கூட வச்சுக்காதடா வா போய்டலாம் " என்று சொல்ல அவனை அழுத்தமாக பார்த்த ஆதித் " யாரும் இல்லன்னா சொல்லு நானே நிற்கிறேன்.. " என்று சொல்ல அது நதீகா காதில் தெளிவாக விழுந்தது.
உடனே நதீகா "ஓஹ் வெளியூர் காரன் நீ எலெக்ஷன்ல நின்னு ஜெயிக்க போறியா? குட் ஜோக்" என்று சொல்லி சிரித்தவள் "உன் பிரெண்டுக்கு கொஞ்சம் ஆர்வ கோளாறு போல, அடக்கி வை" என்றபடி காரில் ஏற போக,அவனோ அவளை இழுத்து விட்டு கார் கதவை அடித்து சாத்தியவன் கையில் இருந்த கார் கீயை கொண்டு காரை லாக் பண்ணி இருந்தான்.
அவளோ தன் மீது கொஞ்சமும் பயம் இன்றி கை வைத்து இழுத்தவனை அதிர்ந்து பார்க்க ஆதித்தும் கொஞ்சமும் சளைக்காமல் "நான் எலெக்ஷன்ல நிற்கிறது நிற்காதது வேற விஷயம், குனிஞ்சு இந்த காசை எடுடி" என்று சொன்னான். அவளோ "முடிஞ்சா எடுக்க வச்சு பாரு" என்று சொல்லி விட்டு மார்புக்கு கையை குறுக்காக கட்டியபடி நிற்க தருணோ 'டேய் வம்பு பண்ணாதடா, வாடா போய்டலாம்" என்று சொல்ல அவனோ "இவ எல்லாம் ஒரு ஆளுன்னு பயந்துட்டு நிற்கிற ..இப்போ பாரு நான் பேசுற பேச்சுல அவ ஆடி போவா" என்றவன் சத்தமாக பக்கத்தில் நின்றவர்களிடம் "இவங்க ஆளுங்கட்சி மினிஸ்டர் ஓட பி ஏ தானே, இந்த பொண்ணுக்கு காச பிச்சை போடுற போல எறிஞ்சு இருக்காங்க,, இப்படிப்பட்ட ஆட்களுக்கு நீங்க வாக்கு அளிக்கணுமா என்ன? நம்ம போடுற பிச்சை வாக்குல பதவிக்கு வந்திட்டு இப்போ உழைப்பாளிகளை பிச்சை காரன் போல நடத்துறாங்க,, அந்த மதுபாலாவோட பையன் தானே இந்த மேயர் எலெக்ஷன்ல நிற்கிறான். அவன் ஆட்சிக்கு வந்தா எப்படி இருக்கும்னு யோசிங்க... அவங்க பி ஏ க்கே இந்த திமிர்னா அந்த பையன் எப்படி இருப்பான்?" என்று அந்த இடத்தில் அரசியல் பேசியவன் கண்கள் ஒரு கணம் நதீகாவில் பதிந்து மீள அவளோ விதிர் விதித்து போனாள்.
"நம்மள வச்சே அரசியல் பண்ணுறானே." என்று பயந்தவள் "அப்படிலாம் ஒன்னும் இல்ல, எனக்கு மக்கள் மேல மதிப்பு இருக்கு" என்று சொல்ல அவனோ "அப்போ அந்த காசை குனிஞ்சு எடுக்க வேண்டியது தானே" என்று சொன்ன அடுத்த கணமே அவள் குனிந்து அந்த காசை எடுத்து பூ கட்டும் பெண்ணின் கையில் வைத்தாள். உடனே அவன் மெல்லிய சிரிப்புடன் அவள் அருகே வந்து கார் கீயை நீட்ட அவளோ அவனை எரித்து விடுவது போல பார்த்துக் கொண்டே அதை பறித்து எடுத்தவள் காரில் ஏற அவனோ தனது பர்சில் இருந்த விசிட்டிங் கார்டை எடுத்து கார் கண்ணாடியின் ஊடு அவளிடம் கொடுத்து "உன் கண்ணாடிக்கு காசை நான் தரேன் நாளைக்கே கால் பண்ணு " என்றவன் "எடுடா வண்டியை" என்றபடி புல்லட்டில் ஏறிக் கொள்ள நதீகாவோ மனம் எல்லாம் ரணமாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.
வண்டியில் செல்லும் போதே தருண் மதுபாலாவின் அரசியல் காய் நகர்வுகளை பற்றி சொல்ல ஆதித்தோ "ரொம்ப பயங்கரமான பொம்பிளையா இருக்கும் போலவே டா. ஆனா எதுக்கு நீ பயப்படணும்?.. நீ உன் அண்ணாக்கு பதிலா நில்லு, உன்னை நான் ஜெயிக்க வைக்கிறேன்.. நாளைக்கே அந்த மதுபாலா கோஷ்டிக்கு முடிவு கட்ட ஆரம்பிக்கலாம்.. நம்ம முதல் பலி ஆடு இந்த பொண்ணு..ஆமா இவ பேர் என்ன?" என்று கேட்க தருணோ "இவ பேர் நதீகா , " என்று சொல்ல "ஓஹ் , அப்போ நம்ம முதல் செக் மேட் வைக்க வேண்டியது இந்த பொண்ணுக்கு தான்" என்று சொல்ல தருணோ "அப்பாக்கு தெரிஞ்சா என்ன கொன்னுடுவார்டா" என்று சொல்ல ஆதித்தோ "பயந்து பயந்து அரசியல் பண்ண முடியாது. நீ மேயர் ஆகிறது என்னோட பொறுப்பு" என்றவன் காய்களை கச்சிதமாக நகர்த்த யோசித்தான். அதே சமயம் இரு நாட்கள் கழித்து கார் கண்ணாடி சீர் செய்து வந்த பில்லை பார்த்த நதீகா "அது தான் அவனே காசு தரேன்னு சொன்னானே. எதுக்கு நாம சும்மா செலவழிக்கணும் " என்று நினைத்தவாறே அவன் விசிட்டிங் கார்டை தேடி எடுத்து அவனுக்கு அழைத்தாள்.
மறுமுனையில் அவன் "ஹெலோ" என்றதுமே அவள் " என் காசை எப்போ தருவ? " என்று கேட்க ஆதித்தோ " நான் சொல்ற இடத்துக்கு டென் மினிட்ஸ் ல வா. " என்றான். அவளோ " என் காரை உடைச்ச நீ தான் தேடி வந்து காசு தரணும் " என்று எகிற அவனும் " காசு வேணும்னா வாடி " என்றபடி போனை வைத்து விட்டான். சிறிது நேரத்தில் அவன் சொன்ன இடத்துக்கு செல்ல அங்கு ஒரு சின்ன பையன் கையில் பையுடன் காத்துக் கொண்டு இருந்தான். அவளும் காரில் இருந்து இறங்கி சுற்றும் முற்றும் பார்க்க அவளை நோக்கி வந்த அந்த பையன் " உங்க கிட்ட ஆதித் அண்ணன் கொடுக்க சொன்னார் " என்று சொல்ல பையை வாங்கி காசை எடுத்து எண்ணி பார்த்தவள் " ஐயா நேர்ல வரமாட்டாரா?? சரி நீ போ " என்றபடி காரில் ஏற அந்த பையனோ கை கூப்பி முகத்தை பாவமாக வைத்தபடி வணக்கம் தெரிவித்தவன் அங்கிருந்து அகல அவளும் தோள்களை உலுக்கி விட்டு காரில் ஏறிக் கொண்டாள் ..
அடுத்த நாள் டி வி யைப் போட்ட நதீகா அதிர்ந்து நின்றாள் .. ஆம் கண்ணீருடன் பேட்டி கொடுத்துக் கொண்டு நின்ற அந்த பையன் " என் அம்மாவோட தாலியை வித்து அரசாங்க வேலைக்காக காசு கொடுத்தேன் .. அதுக்கு ஆதாரம் கூட இருக்கு... ஆனா இப்போ வேலை தர மாட்டேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க.. " என்று சொல்ல அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.. மதுபாலாவுக்கு எதிரான அந்த தொலைக்காட்சியும் நதீகா காசு வாங்கிய காணொளியை போட்டு காட்ட அவளுக்கு இது அனைத்தும் ஆதித்தின் சதி என்று தெளிவாக தெரிய அவள் போன் அலறியது..
மறுமுனையில் மதுபாலா " நதி என்ன பண்ணி வச்சு இருக்க?? " என்று திட்ட ஆரம்பிக்க அவளோ " மேடம் இது நான் பண்ணல... திட்டமிட்ட சதி " என்று சொன்னவள் " கொஞ்சம் டைம் தாங்க மேடம் " என்றபடி ஆதித்துக்கு போனை எடுத்தால் அவன் எடுக்கவே இல்லை.
நேரே காரில் ஏறியவள் தருண் வீட்டுக்கு செல்ல முற்பட அங்கு சாலை ஓரத்தில் ஆதித் இளநீர் குடித்துக் கொண்டு இருந்தது கண்ணில் பட்டது.. அடுத்த கணமே இறங்கி அவனை நோக்கி சென்றவள் கையில் இருந்த இளநீரை தட்டி விட அவனோ " என்னாச்சு?? " என்று யோசனையாக கேட்டான். அவளும் " இன்னும் என்ன ஆகணும்.? பிளான் பண்ணி என்ன மாட்டி விட பார்க்கிறியா? எதுக்குடா அப்படி பண்ணுன? யூ இடியட் ,, " என்று திட்ட அவனும் " நான் என்ன பண்ணினேன்?? " என்று சாதாரணமாக கேட்டான். " இங்க பாரு..இந்த நடிக்கிற வேலை வச்சுக்காத ... எனக்கு வர்ற கோபத்துக்கு " என்று ஆரம்பிக்க " கார் கண்ணாடியை உடைக்கனும் போல இருக்கா? இந்த கார்ல கை வைக்க அவ்ளோ தைரியம் இருக்கா " என்று கேட்க அவளோ பக்கத்தில் இருந்த கட்டையை தூக்கியவள் ஆத்திரத்தில் சற்றும் யோசிக்காமல் " யாருக்கு தைரியம் இல்ல? " என்றபடி அந்த கார் கண்ணாடியை ஓங்கி அடித்தாள் ...
உடனே அருகே இருந்த கடையில் இருந்து ஓடி வந்த ஒருவன் " ஐயோ என் கார் " என்று சொல்ல அவள் செயலை கழுத்தை வருடியவாறு பார்த்துக் கொண்டு இருந்த ஆதித் " வண்டிய எடுடா போகலாம் " என்றபடி அவர்கள் வந்த புல்லட்டில் ஏற அதிர்ச்சியும் கோபமுமாக அவனை முறைத்துப் பார்த்தாள் நதீகா.. அவனோ பின்னால் ஏறி இருந்து ஹெல்மட்டை போட்டு முகத்தை மறைத்தவன் வண்டி ஸ்டார்ட் ஆனதும் நடுவிரலை அவளை நோக்கி காட்டி விட்டு செல்ல அவளுக்கோ கோபம் எல்லை கடந்து போனது. இடையில் காரின் உரிமையாளன், " என் கார் மேடம் " என்று ஆர்மபிக்க " கொஞ்சம் இரு " என்றவள் தனது பையில் இருந்து காசை எடுத்து அவன் கையில் வைத்துவிட்டு கொதிக்கும் மனதோடு புறப்பட்டாள்.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக அடுத்த நாள் " மினிஸ்டர் மதுபாலாவின் செகிரீடரியும் எம் எல் ஏ பாண்டியனின் மகளுமான நதீகவின் வெறி செயல்.. மனநிலை பாதிக்கப்பட்டு இருக்காரா? " என்று தலைப்பை இட்டு ஒரு செய்தி அவள் கார் கண்ணாடியை உடைக்கும் படத்துடன் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டு இருந்தது..ஏற்கனவே நதீகாவிடம் இருந்து ஒழுங்கான பதில் கிடைக்காத கோபத்தில் இருந்த மதுபாலா, இன்னும் கொதித்து போனாள். நதீகாவுக்கு அழைத்தவள் " வாட்ஸ் ராங் வித் யூ?" என்று சீற, அவளும் இனி மறைத்து பயன் இல்லை என்று நினைத்தவள் ஆதித் செய்த அனைத்தையும் கூறி விட அதைக் கேட்ட மதுபாலாவோ "ஹீ இஸ் டேஞ்சரெஸ்,, இனி அவன் கிட்ட கவனமா இரு, வாய கொடுக்காதே.. நான் பார்த்துகிறேன்" என்று போனை வைத்தவள் தனது அடியாளை அழைத்து " தன்ராஜ் வீட்ட ஒருத்தன் வந்து இருக்கான். அவன் மகனோட பிரென்ட்.,ஏதோ சாதிக்கோ ஆதிக் ஆம் .. பேர் நினைவு வரல, " என்று சொன்னவளுக்கு நதீகா சொன்ன பெயரும் தெளிவாக விளங்கவில்லை. பெருமூச்செடுத்தவள் "அவன் மேல ஒரு கண் வச்சுக்கோ.. " என்று சொல்ல அந்த அடியாளும் சம்மதமாக தலை ஆட்டினான்.
அதே சமயம் கால் மேல் கால் போட்டு இருந்த ஆதித் நாடியை நீவியவாறு பத்திரிகையில் வெளி ஆகி இருந்த நதீகாவின் படத்தை பார்த்து சிரித்துக் கொண்டு இருக்க அவன் அருகே இருந்த தருணோ "டேய் என்னடா இப்படி இருக்க? அரசியலிலே இவ்ளோ நாள் இருக்கிற என் அப்பாக்கு கூட இந்த அளவுக்கு அரசியல் அறிவு இல்ல, நீ வேற லெவல் மச்சி" என்று சொல்ல அவனை பார்த்து ஒற்றை கண்ணை அடித்தவன் "உன் அப்பா கிட்ட போய் சொல்லு தேர்தல் ல நிற்க போறேன்னு..உனக்கு நான் இருக்கேன். இந்த எலெக்ஷன் முடிஞ்சு உன்னை மேயராக்கும் மட்டும் நான் இந்த ஊரை விட்டு போக மாட்டேன்.. " என்று சொல்ல அவனும் தந்தையை தேடி புறப்பட்டான்.
அதே சமயம் "உன்னை மேயர் ஆக வைக்கிறது என்னோட பொறுப்பு.. டென்சன் ஆகாத மிதுன்" என்று மகனை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தாள் மதுபாலா.