ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 4- அகமாளவந்த அகவாளனே!

Pommu Novels அவர்களின் AP Verses
AVP Writing excellence award
போட்டிக்கதைகள்.

#ஆண்டாள்_வெங்கட்ராகவன்
#அகமாளவந்த_அகவாளனே

நாயகி நறுவீ.. அழகான பெயர் 🥰 இவளின் முதல் திருமணம் தோல்வியில் முடிய. இவள் தான் வேண்டும் என போராடி இவளை திருமணம் முடிக்கிறான் தமிழறிவாளன். இவள் தான் தன் மனைவியாக வேண்டும் என்பதற்காக அவனின் அன்னை காமாட்சியிடம் ஒரு பெரும் விஷயத்தை கூறுகிறான். அதில் அன்னையின் கண்ணீர் தான் அதிகமாக்கிறது. பெண் அவளை மணம் முடிக்க பெரும் தடையாக இருந்தவர் பின், மகன் கூறிய ஒற்றைச் சொல்லில் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இதைக் கேட்டு விடும் தமிழறிவாளனின் தம்பி இளங்கோ மிகவும் கோபப்பட்டு அண்ணனுடன் பேசாமல் அவனை தவிர்க்கிறான். அப்படி என்ன பெரிய விஷயம் அது. என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். காமாட்சி சராசரி மாமியாராக இருந்தாலும் நியாயவாதியாக சில இடங்களில் நடந்து கொள்கிறார். சிறப்பு 🥰
இளங்கோ அருமையான கதாபாத்திரம் நறுவீயுடன் இவனுக்கு இருக்கும் பந்தம் வெகு அழகு 🥰
தமிழறிவாளன் தன் மனதில் இருக்கும் மொத்த காதலையும் தன் மனைவியானவளிடம் சேர்ப்பிக்கும் இடங்கள் அனைத்தும் அருமை 🥰
இவனின் தந்தை ஒரு சில இடங்களில் மட்டுமே வந்தாலும் அவரின் கதாபாத்திரம் வெளிப்படுத்திய விவரங்கள் அனைத்தும் மிக அருமை.

நறுவீ முதல் திருமணத்தில் காயப்பட்ட இவளின் மனது இரண்டாம் திருமணத்தில் காதலால் மிளிர்கிறது. காதல் கொண்ட கணவனால் இவள் அச்சங்களும், ஒடுக்கங்களும், வேதனைகளும் துடைத்தெடுக்கப்படுகிறது.
சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
Good luck 🥰❤️
 
#அகமாளவந்த_அகவாளனே
#கௌரிஸ்ரிவ்யூ

மறுமண கதை,...

நறுவியின் முதல் திருமணம் தோல்வியில் முடிய….இல்ல இல்ல அப்படி முடிக்க பட்டதாக காட்டப்பட்டதோ 🤔🤔🤔🤔🤔…..

அதற்கு காரணம் அவளுக்கு குழந்தை பிறக்காது என்பது தான்….

அறிவு அவளை விரும்பி மணம் புரிய அவங்க வாழ்க்கை தான் கதை.🤩🤩🤩🤩

நறுவி….பேரு நல்லா இருக்கு….குழந்தை பிறகாதுன்னு சொல்லி முதல் கணவனாக பட்டவன் தள்ளி வைக்க….

மனதால் பெரும் துயர் பெண்ணுக்கு🥺🥺🥺🥺🥺….

Divorce வாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டா….அவள் வாங்கும் பேச்சுக்கள்….. அப்ப அப்ப….

சொந்த அம்மா அப்பா கூடவா😔😔😔😔😔

ஒரு கட்டத்திற்கு மேல், பெண்ணவளும் இறுக்கமாவே மாற….

அவளின் வாழ்வில் வரும் அறிவு?????

அறிவு…..விவரம் அறிய வயதில் வந்த காதலை கையாளுவதில் ஆகட்டும், தன்னவள் இனி தனக்கு இல்லனு அழுவதில் ஆகட்டும், அப்படி அழுதால் எங்க அவள் வாழ்க்கையில் துன்பம் வந்துவிடுமோனு அஞ்சி அவளுக்காக வேண்டி கொள்வதில் ஆகட்டும்…..

இனி அவளின் வாழ்க்கையில் தான் மட்டுமேனு முடிவு எடுப்பதில் ஆகட்டும்…..

அவளால், அவளுக்காகனு ஒண்ணு ஒன்னா செய்யறதில்…..just வாவ் தான் அறிவு♥️♥️♥️♥️♥️♥️

இளங்கோ…..அறிவு தான் தன்னவள் அப்படினு ஒரு பக்கம் தாங்கினா….என் அண்ணி அம்மாவுக்கும் மேலனு இவங்க ரெண்டு பேரோட பாண்டிங் ரொம்ப cute 🥰🥰🥰🥰🥰🥰

காமாட்சி….மருமக கிட்ட ஒட்டி உறவாடல அப்படினாலும்….கொஞ்சம் கொஞ்சமா இவங்களின் அக்கறை நல்லா இருந்தது 👏 👏 👏 👏 👏 👏

நறுவி அப்பா அம்மாக்கு இவங்க எவ்வளவோ பரவால்ல….

கதை, அதை சொன்ன விதம் எல்லாமே ரொம்ப ரொம்ப அருமை🥰🥰🥰🥰🥰…..

இன்னும் கொஞ்சம் இருக்காதா அப்படினு தோணிச்சு🤩🤩🤩🤩🤩……

போட்டியில்
வெற்றி பெற வாழ்த்துக்கள் டா💐💐💐💐💐💐
 
Top